tamilnadu

img

பாலியல் கொடுமைகளின் பூமியா உ.பி?

சென்னை":
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ள கொடூரமான பாலியல் வன்கொடுமையை சுட்டிக்காட்டி, ஆன்மீக பூமியான இந்தியா, பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கின்போது, மஹாராஷ்டிராவில் உள்ள தமிழர்களை மீட்க கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் தொடர்பான விவகாரங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என மத்திய மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து வழக்கை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அப்போது, மனுதாரர் சூரியபிரகாசம் ஆஜராகி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த 22 வயது பெண் தொழிலாளர் ஒருவர் 4 பேரால் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டுள்ளதாக இன்றைய செய்திதாள்களில் வெளியான செய்தியை சுட்டிக் காட்டினார்.அதற்கு நீதிபதிகள், தமிழகத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய நேரக்கட்டுப் பாடும் இல்லை என்றும், உரிய ஊதியமும் வழங்கப் படுவதில்லை என்றும் குற்றம்சாட்டினர். மேலும், ஆன்மீக பூமி என கருதப்படும் இந்திய நாட்டில், 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பதாகவும் பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளதாக வேதனை தெரிவித்தனர். இது துரதிஷ்டவசமானது என்றும், குறிப்பாக இனியாவில் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.பின்னர் திருப்பூர் சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
===