tamilnadu

img

இ-சேவை மைய எண்ணிக்கை 35 ஆயிரமாக உயர்த்தப்படும்!

சென்னை, ஜூன் 29 - தமிழகத்தில் இ-சேவை மையங்க ளின் எண்ணிக்கையை 35 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தகவல் தொழில் நுட்பவியல் துறை  மானியக் கோரிக்கை மீதான விவா தத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்  சர் பழனிவேல் தியாகராஜன், “தமிழ் நாடு அரசு கேபிள் டிவி செயல்திறன்  குறைந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதற்கு காரணம் அதி முகதான். தமிழ்நாடு அரசு கேபிள்  டிவி நிறுவனத்தை போல மோசமான  நிலையில் இருந்த ஒரு நிறுவனத்தை நான் கண்டதில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தபோது கிட் டத்தட்ட அது திவாலாகும் நிலை யில் இருந்தது. அந்த நிறுவனம் ரூ. 575 கோடி நிதியை நிலுவை வைத்திருந்  தது. ரூ. 270 கோடி நிதி கேபிள் ஆப ரேட்டர்களிடம் இருந்து திரும்பப் பெறப்படவில்லை. மேலும், ரூ. 170 கோடி  வரை வருவாய் இழப்பைச் சந்தித்து வந்தது.

தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அரசு  கேபிள் டிவி நிறுவன நிலுவைத் தொகையை ரூ.471 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. தொடர் எச்டி  செட்டப் பாக்ஸ் போன்ற திட்டங்களை தற்போது அறிமுகப்படுத்தி வரு கிறோம்” என்றார்.

தமிழ்நாட்டில் தற்போது 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் எண்ணிக்கையை 35 ஆயிரமாக  உயர்த்த இலக்கு நிர்ணயித்துள் ளோம்.  மேலும், நகர்ப்புறங்களில் ஒரு  கி.மீட்டர் தொலைவுக்குள், கிராமங்க ளில் 3 கி.மீட்டர் பரப்பளவுக்குள் ஒரு  இ-சேவை மையம் அமைக்க திட்டமி டப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

பெருங்குடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா!

மேலும், “தகவல் தொழில் நுட்ப வியல் துறையின்கீழ் இயங்கும் நிறு வனங்கள் மறுசீரமைப்பு செய்யப்  படும். அவற்றின் வெளிப்படைத்தன் மையை உறுதிப்படுத்துவதற்கான நட வடிக்கைகளும் எடுக்கப்படும். சென்னை பெருங்குடியில் 3.6 ஏக்கரில்  தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்  கப்படும்.

தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பு மூலமாக மாநிலம் முழு மைக்குமான புவியியல் நில வரை படம் ரூ.15 கோடியில் உருவாக்கப் படும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுக் கல்லூரிகள் மற்றும் பிற அரசு  நிறுவனங்களுக்கு குறைந்த கட்ட ணத்தில் அதிவேக இணையதள வசதி கள் வழங்கப்படும்.

புதிதாக தொழில்நுட்பக் கொள்கை 

இதுதவிர தமிழ்நாடு அரசு கேபிள்  டிவி நிறுவனம் மூலமாக குறைந்த கட்ட ணத்தில் இணையதள தொலைக் காட்சி சேவைகள் சந்தாதாரர்களுக்கு விரைவில் அளிக்கப்படும். 

கணினித் தமிழ் மாநாடு 

பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி உட்பட 16 சேவைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை  பன்னாட்டு கணினித் தமிழ் மாநாடு நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.