போதை ஒழிப்பு தின உறுதி ஏற்பு
உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மதுவிலக்கு மற்றும் ஆயர்தீர்வை துறையின் சார்பில் ராணிப்பேட்டை மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதனன்று (ஜூன் 26) மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரன் சுருதி முன்னிலை வகித்தார். உடன் உதவி ஆணையர் (கலால்) வரதராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, கல்லூரி முதல்வர் சாஜீத், உதவி பேராசிரியர் முபாரக்ஹலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கட்டுமானசங்க புதிய கிளை அமைப்பு
கள்ளக்குறிச்சி, ஜூன் 26- கள்ளக்குறிச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் டி.ஒரத்தூ ரில் புதிய கிளை அமைத்து கொடியேற்றுதல் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது.
கட்டுமான தொழிலாளர் சங்க கிளைத் தலைவர் எஸ்.அஞ்சாபுலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிஐடியு மாவட்டச் செய லாளர் எம். செந்தில் பெயர் பலகை திறந்து வைத்து பேசி னார். கிளை செயலாளர் சி.அமுல்ராஜ் வரவேற் புரைஆற்றினார். நிகழ்ச்சி யின் சிறப்பு விருந்தினராக டி.ஒரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கவுன் சிலர் பிரபு,ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் சிவ குமார், கட்டுமான தொழி லாளர் சங்க மாவட்ட செய லாளர் எஸ்.சேகர், ஒன்றிய நிர்வாகிகள் டி.ராஜி, கே.கரி காலசோழன், கே. வெங்க டேசன், எ. மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.
புதிய நிர்வாகிகள்
தலைவராக அஞ்சாபுலி, செயலாளராக அமுல்ராஜ், பொருளாளராக வி.ஆனந்த ராஜ் ஆகியோர் நிர்வாகி களாக தேர்வு செய்யப் பட்டனர்.
நந்தனத்தில் விடுதி கட்டுமானப்பணி தீவிரம்
சென்னை,ஜூன் 26- சென்னை நந்தனத்தில் உள்ள எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளா கத்தில் சிறப்பு திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் ரூ.44.50 கோடி செலவில் 121 அறை களுடன் 484 மாணவர்கள் தங்கும் வகையில் புதிய மாணவர் விடுதி கட்டிடம் கட்டும் பணி துரிதமாக நடை பெற்று வருகிறது. சட்டப் பேரவையில் பொதுப்பணித் துறைஅமைச்சர் எ.வ.வேலு இதனை தெரிவித்தார்.
மதுராந்தகத்தில் தலைமை காவலர் தற்கொலை
மதுராந்தகம்,ஜூன் 26- செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலை யத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சுரேந்தர். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படு கிறது. சமீபத்தில் இவர் பணி இடை நீக்கம் செய்யப் பட்டதாகவும் தெரிகிறது.
இந்தநிலையில் சுரேந்தர் மனைவியை விட்டு பிரிந்து மதுராந்தகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை என தெரிகிறது. அவரது குடியிருப்பு பகுதியில் இருந்து துர்நாற்றம் வீச துவங்கி யுள்ளது. இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மதுராந்தகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுராந்தகம் காவ லர்கள் சுரேந்தர் வீட்டை உடைத்து பார்த்த பொழுது உள்ளே அவர் தூக்கில் தொங்கி இருந்தது தெரியவந்தது. உடனடி யாக பிரேதத்தை கைப்பற்றிய மதுராந்தகம் காவலர்கள் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
காஞ்சிபுரம், ஜூன் 26 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வெள்ளியன்று காலை மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்ட ரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுனர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.