tamilnadu

img

பூந்தமல்லி - போரூர் வரை ஒரு பாதையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

பூந்தமல்லி - போரூர் வரை ஒரு பாதையில்  ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

போரூரில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

 பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் மெட்ரோ வழிதடத்தில் பாதை பணிகள் முடிவடைந்துள்ள பூந்தமல்லி - போரூர் வரை ஒரு வழிப்பாதையில் திங்களன்று (ஏப். 28) சோதனை ஓட்டம் நடைபெற்றது. 

சென்னை,ஏப்.28- பூந்தமல்லி - போரூர் வரை 9.1 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் ஒரு வழி பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் திங்களன்று (ஏப்.28) நடைபெற்றது.  சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி  மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படு கிறது. இந்த வழித்தடங்களில் ஒட்டு மொத்தமாக 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். கலங்கரை விளக்கம் - கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை யாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் - பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்ட ப்பாதையாகவும் அமைகிறது. தற்போது, பல்வேறு இடங்களில் சுரங்க ப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அதிலும், போரூர் - பூந்தமல்லி பைபாஸ் இடையே பல இடங்களில்  பொறியியல் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இப்பாதையில் தற்போது உயர்மட்டப் பாதை அமைக்கப்பட்டுவிட்டது. அடுத்த கட்டமாக, தண்டவாளம் அமைக்கும் பணி, உயர்மட்ட மின் பாதை பணிகள் வேகமாக நடை பெறுகின்றன. இந்த வழித்தடத்தில் ஒரு பகுதியாக, பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரை யிலான 2.5 கி.மீ தொலைவுக்கு சோதனை ஓட்டம் ஜன.20-ம் தேதி வெற்றி கரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பூந்தமல்லி - போரூர்  வரை ஒரு வழிப்பாதையில் சோதனை ஓட்டம் ஏப்.28-ம் தேதி நடைபெற்றது. இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதி யாக, பூந்தமல்லி முதல் போரூர் வரை யிலான மெட்ரோ ரயில் சேவையை இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூந்த மல்லி முதல் போரூர் சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையில் (மேல் பாதை) தண்ட வாளம் அமைக்கும் பணி கடந்த வாரம் முடிந்தது. தற்போது, இப்பாதையில் உயர் நிலை மின்பாதை அமைக்கும் பணி யும் 100 விழுக்காடு நிறைவடைந்து உள்ளது. இதைத் தொடர்ந்து, பூந்தமல்லி - போரூர் சந்திப்பு வரையிலான (9.1 கி.மீ) ஒருவழி பாதையில் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை (ஏப்.28) மாலை மேற்கொள்ளப்பட்டது. இதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், நிதி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அமைப்புகள் மற்றும் இயக்கத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், தலைமைப் பொது மேலாளர்கள் ஏ.ஆர்.ராஜேந்திரன் (மெட்ரோ ரயில், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு),  எஸ்.அசோக் குமார் (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), ஆலோசகர் எஸ்.ராம சுப்பு (மெட்ரோ ரயில் இயக்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி புற வழிச்சாலை, பூந்தமல்லி, முல்லைத் தோட்டம், கரையான்சாவடி, குமணஞ் சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன் தாங்கல், தெள்ளியகரம், போரூர் பைபாஸ், போரூர் சந்திப்பு ஆகிய நிலை யங்கள் இடம்பெற உள்ளன. மற்றொரு  பாதையில் பணிகள் முழுவீச்சில் நடை பெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.