திருவண்ணாமலை நகராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் பாசி கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை நகராட்சியில் பெரும்பாலான வார்டுகளில் இந்த குடிநீரை தான் அருந்துகிறார்கள். இதனால் சுகாதாரம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.எனவே உடனடியாக தண்ணீரை சுத்தப்படுத்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.