சென்னை, ஜன. 6 - குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணி யாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வியா ழனன்று (ஜன.6) வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா பேரிடர் காலத்தில் தொடர்ந்து பணியாற்றும் தொழிலா ளர்களை முன்களப் பணியாளர்க ளாக அறிவிப்பதோடு, நிலுவையில் உள்ள ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழி லாளர் சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ் கூறுகையில், 480 நாட்களுக்கு மேல் பணியாற்றிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாரி யத்தில் உள்ளனர். இந்த தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக 15-3-2019 அன்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதனை நிர்வாகம் அமல்படுத்தாததால், அக்.10ந் தேதி வாரியத் தலைவரை சந்தித்து வலியுறுத்தினோம். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கா மல் உள்ளனர்” என்றார். கொரோனா காலத்தில் பணி யாற்றிய ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை கூட நிர்வாகம் வழங்கவில்லை. இதனையும் மீறி பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி கொடுக்கவில்லை. ஒப்பந்த முறை லஞ்சம் பெறுவ தற்கே வழிவகுக்கிறது. எனவே, ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும். தொழிலாளர்களை நேரடியாக பணியமர்த்த வேண்டும். தொழிலா ளர்களின் உரிமைக்காக போராடி வரும் சங்கத்தின் பொதுச் செயலா ளர் எம்.பழனி மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். வாரியத்தில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். என்றும் அவர் கூறினார். தொழிலாளர்களின் கோரிக்கை களை நிறைவேற்றாவிடில், வாரியப் பணிகள் ஸ்தம்பிக்கும் வகையில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர்கள் சி.திரு வேட்டை (மத்திய சென்னை), பா.பாலகிருஷ்ணன் (தென் சென்னை), சங்க நிர்வாகிகள் ஞான பிரகாசம், சி.சத்யநாதன், சுதாகர், ஜானகிராமன், சீனிவாசன் உள்ளிட் டோர் பேசினர்.