அரக்கோணம் முதல் செங்கல்பட்டு வரை இரட்டை வழித்தடம் அமைகிறது
சென்னை, ஜூன் 14- அரக்கோணம் முதல் செங்கல்பட்டு வரை இரட்டை வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வு பணி தொடங்கியுள்ளது. அரக்கோணம் முதல் செங்கல்பட்டு வரை இரட்டை வழித்தடம் அமை யும் பட்சத்தில் ரயில் போக்கு வரத்து இந்த வழித்தடத்தில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சேவையை தொடங்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் கடற்கரை வழியாக பொது மக்கள் சுற்றிக் கொண்டு செல்லத் தேவையில்லை. இது தொடர்பாக தென்னக ரயில்வே தலைமை செய்தி தொடர்பு அலுவலர் செந்தமிழ் செல்வன் கூறியுள்ளதாவது: காஞ்சிபுரம், திருமால்பூர் வழியாக செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே இரட்டை வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்வதற்காக ஒப்புதல் கிடைத்திருக்கிறது. இப்போதைக்கு அரக் கோணம் முதல் செங்கல் பட்டு வரை புறநகர் சேவை வழித்தடத்தில் ஒரே ஒரு தண்டவாளம் மட்டும் இருக்கிறது. இடைப்பட்ட தூரத்தில் 9 ரயில் நிலை யங்கள் உள்ளன என்று அவர் கூறினார். அண்மையில் ரயில்வே உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது, மண்டல ரயில்வே பயனாளிகள் ஆலோசனை கமிட்டி குழு உறுப்பினர் கிஷோர் குமார், அரக்கோணம்- செங்கல்பட்டு இடையே இரட்டை வழித்தடம் அமைப்பதற்கான முக்கியத்துவத்தை வலி யுறுத்தினார். மேலும், சென்னைக்கு நிகராக காஞ்சிபுரம் அருகில் இப்போது தொழிற்சாலை கள் பெருகி வருவதால், இங்கு ரயில் சேவையை மேம்படுத்துவது தொடர்பாகவும் அவர் எடுத்துரைத்தார். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு புறநகர் ரயில் சேவையை சென்னை மண்டல ரயில்வே இயக்குகிறது. இதன்மூலம் தினசரி 10 லட்சம் பேர் வரை பயனடைந்து வரு கின்றனர். செங்கல்பட்டு வரை செல்லும் ஒரு சில ரயில்கள் திருமால்பூர் வரை நீட்டிக்கப்படுகிறது. அதுவும் ஒரு வழித்தடத்தில் செல்கிறது. ஆகையால் இந்த வழித்தடத்தில் இரட்டை வழித்தடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இரட்டை வழித்தடம் அமைந்தால் திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி செல்லும் பயணிகள் மிகவும் பயனடைவார்கள். வரவேற்பு சென்னை மண்டலத்தை பொருத்தமட்டில் இந்த வழித்தடத்தில் சரக்கு ரயில் மட்டுமின்றி, பயணி கள் ரயில் மூலமாகவும் ரயில்வேக்கு அதிகப்படி யான வருவாய் கிடைக்கி றது. இருப்பினும் இந்த வழித்தடத்தில் மட்டும் இரட்டை வழித்தடம் அமைக்கப்படாதது மிகப் பெரிய குறையாக இருந்தது. தற்போது இதற்கான ஆய்வு தொடங்கப்பட்டு இருப்பது பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது.