சென்னை:
கொரோனா அச்சுறுத்தலால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இன்னும் 2 மாதத்திற்கு வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திருத்தணி அரசு பொது மருத்துவமனை மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண் டார். அதன்பின், கடை வீதிகளுக்கு சென்று பொதுமக்கள் முக கவசம் அணிந்திருக்கிறார்களா? சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘கொரோனாவின் தாக்கம் குறித்து மக்கள் இன்னும் முழுமையாக அறியாமல், அலட்சியத்துடன் செயல் படுவதாகவும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இன்னும் 2 மாதத்திற்கு வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.