tamilnadu

img

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க திமுக எம்பி சிவா வலியுறுத்தல்

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று திமுக எம்பி சிவா வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வினால் இதுவரை 5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தர வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டத்தை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக கிராமப்புற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு தடையாக இருப்பதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.