tamilnadu

திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்

சென்னை, ஏப்.28-திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை முன்னாள்உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி,உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் பிறந்தவர் வசந்தி ஸ்டான்லி. சட்டம் பயின்ற அவர், திரைப்பட தணிக்கைக் குழுஉறுப்பினர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினராக பதவி வகித்துள்ளார். 2008 முதல் 2014-ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவரதுஉடல்நிலை மோசமடைந்ததால், சனிக்கிழமை(ஏப்.27) இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 56.