tamilnadu

img

விஜயகாந்த் உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை

சென்னை, நவ.23- தேமுதிக தலை வர் விஜயகாந்த் உடல் நிலை சீராக உள்ள தாகவும், விரைவில் அவர் வீடு திரும்பு வார் என்றும் மருத்து வமனை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்று மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக நீண்ட நாட்களாக பொது வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பங்கேற்பது குறைத்து விட்டார். 

கடந்த 18 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம், வயது மூப்பு போன்ற காரணங்களால் அவருடைய உடல் முழுவதும் பல்வேறு பிரச்சனைகள் இருப்ப தால் அவருக்கு இது போன்று உடல்நலக் ்குறைவு ஏற்படு வதாகவும் மருத்து வர்கள் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த நவ.18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. 

அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.