tamilnadu

img

அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி முன்பதிவு தொடக்கம்

சென்னை, செப்.5- அரசு விரைவு பேருந்து களில் 60 நாட்களுக்கு முன்ன தாகவே முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீண்ட தூரம் செல்லக்கூடிய எஸ்இடிசி பேருந்துகளில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதி போன்றவை இருப்பதால் அதிக அளவில் பயணிக்கத் தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் கடந்த  1, 2 ஆம் தேதிகளில் முன்பதிவு செய்தனர். அக்டோபர்  28, 29 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கு முன் பதிவு தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய அனைத்து பேருந்துகளும் நிரம்பிவிட்டன.

இதுவரை 19,854 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது. சென்னையிலிருந்து 7,856 டிக்கெட்டு கள் முன்பதிவு செய்யப்பட்டது. அக்டோபர் 29 அன்று ஒரு நாளைக்கு மட்டும் 10,542 டிக்கெட்டுகளும் அக்டோபர் 30 அன்று 9,402 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டன.

அதே போல பண்டிகை முடிந்து நவம்பர் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு வருவதற்கு பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. 1500 பேருந்துகளுக்கு முதல் கட்டமாக முன்பதிவு நடந்து வருகிறது. இது தவிர வழக்கம் போல சிறப்பு பேருந்துகளும் அறிவிக்கப்படும்.

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அக்டோபர் 10, 12 இல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.