tamilnadu

தமிழ்நாடு மின்சார வாரியம் 3 ஆக பிரிப்பு

சென்னை, மார்ச் 13- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மா னக் கழகத்தை (டான்ஜெட்கோ) மின் உற்பத்தி  மற்றும் பகிர்மானத்துக்கு தனித்தனி நிறுவன மாக பிரிக்க தமிழக அரசு, கடந்த ஜனவரி 2 அன்று  அனுமதி வழங்கி உத்தரவிட்டது. தற்போது  அதற்கான முறைப்படியான அறிவிப்பாணை யை அரசிதழில் வெளியிட்டுள்ளது. 

இதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்திக் கழ கம், தமிழ்நாடு பசுமை மின் உற்பத்திக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்  என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 4 ஆயிரத்து 320 மெகாவாட் திறன்  கொண்ட மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்  மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்படும் உடன்குடி அனல்மின் நிலையம் ஆகியவை தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்துக்கு மாற்றப்படுகிறது.

அதேபோல், 2 ஆயிரத்து 321 மெகாவாட் திறன் கொண்ட குந்தா மற்றும் கொல்லிமலை நீர்மின் நிலையங்கள் மற்றும் அரசுக்கு சொந்த மான 41 மெகாவாட் திறன் கொண்ட காற் றாலை நிறுவனங்கள் தமிழ்நாடு பசுமை எரி சக்திக் கழகத்துக்கு மாற்றப்படுகிறது.

கடந்த நிதியாண்டு நிதி அறிக்கைப்படி சொத்துகள் மற்றும் கடன்கள் இந்த நிறுவ னங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். ஊழியர்கள் இரு நிறுவனங்களுக்கு அயல்பணி மூலம் பணி யமர்த்தப்படுவார்கள் என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.