சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த உறுப்பினர் அங்குசாமி அண்மையில் காலமானார். அவரது குடும்பத்திற்கு எல்ஐசி மற்றும் சங்க உதவி தொகையாக 35 ஆயிரம் ரூபாயை சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன் வழங்கினர். சங்கத்தின் பகுதி தலைவர் எஸ்.எம். முகமதுயாகூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைப்பின் பொதுச் செயலாளர் பா.அன்பழகன், பகுதிச் செயலாளர் பி.ஜெயபாண்டியன், பொருளாளர் ஜி.சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.