சட்டமன்ற இடைத்தேர்தல்: இவிஎம் அனுப்பி வைப்பு
விழுப்புரம், மார்ச் 9- மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக் கப்பட உள்ள நிலையில், இதனுடன் திருக்கோவி லூர் மற்றும் விளவங் கோடு சட்டமன்ற தொகு திக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வரு கின்றன.
இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் சீல் வைத்து மூடப்பட்டுள்ள மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்களை வெளியில் எடுத்து திருக்கோவிலூருக்கு அனுப்பும் பணி சனிக்கிழமையன்று நடைபெற்றது.
விழுப்புரம் ஆட்சியர் பழனி முன்னிலை யில் நடைபெற்ற இந்த பணியின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதி நிதிகள் உடனிருந்தனர். ஏற்கெனவே, விளவங்கோடு தொகு திக்கும் விழுப்புரத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மீனவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்
சென்னை, மார்ச் 9- கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட் டம், குளச்சல் ‘அ’ கிரா மம், காமராஜ் சாலை யைச் சேர்ந்தவர் முகை தீன் யாசர் அலி (32). இவர் அரபிக்கடலில் ஆழ்கடலில் படகில் மீன் பிடிக்கச் சென்றவர்களுடன் சமையல் பணிக்காகச் சென்றிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக படகிலிருந்து கட லுக்குள் தவறி விழுந்துள்ளார். தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இச்சம்பவத்திற்கு வேதனை தெரிவித் துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டா லின், கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள முகைதீன் யாசர் அலி குடும் பத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவா ரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கண்டுகொள்ளாத பாஜககெஞ்சும் ஓபிஎஸ்
சென்னை, மார்ச் 9- தாங்கள் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று முன்னாள் முதல் வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினாலும், பாஜக இதுவரை அவரைக் கண்டு கொள்வதாக இல்லை. இந்நிலையில், வெள்ளியன்று நள்ளிரவு திடீர் கூட்டம் ஒன்றை நடத்திய ஒ. பன்னீர்செல்வம், பாஜக-வுடன் கூட்டணி பேச்சு நடத்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர், தர்மர் எம்.பி., கு.ப. கிருஷ்ணன், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகிய 7 பேர் குழுவை அமைத்துள்