tamilnadu

img

அடிப்படை வசதியின்றி தவிக்கும் வந்தவாசி மக்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க வந்தவாசி நகராட்சியில், அடிப்படை வசதியில்  லாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். வந்தவாசியில், நகராட்சி அலுவலகம் எதிரில் பழைய பேருந்து நிலையம் உள் ளது. நகரில் பேருந்து போக்குவரத்து அதிகரித்ததால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காமராஜர் நகர் அருகில் சுமார் ரூ.5  கோடி செலவில் புதிய பேருந்து நிலையம்  கட்டப்பட்டது. இங்கு பேருந்துகள் வந்து  செல்வதற்காக சுமார் ரூ.2 கோடி செலவில் ஐந்து கண் பாலம் அருகிலிருந்து புதிய  பேருந்து நிலையம் வரை புதிய தார்ச்சாலை யும் அமைக்கப்பட்டது. புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த நாளிலி ருந்தே தனியார் மற்றும் சில அரசுப் பேருந்து கள் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வருவ தில்லை. புதிய பேருந்து நிலையத்தில் பயணி களுக்கு குடிநீர் வசதியில்லை.

 அங்கு கட்டப்பட்டுள்ள கழிவறைக்கும் தண்ணீர் வசதி இல்லாததால், பயணிகள் பரி தவித்து வருகின்றனர்.  செய்யாறு, ஆரணி,  திண்டிவனம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை,   இதேபோல், புதிய பேருந்து நிலை யத்திற்கு செல்லும் சாலை,  குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.  இதனால் இருசக்கர வாகனங்களில்  செல்லும் பயணி களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. செய்யாறு, ஆரணி, திண்டிவனம், தெள்ளாறு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகள், ஐந்து கண் பாலம் அருகே மழையிலும், வெயிலிலும் காத்துக்  கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  புதிய பேருந்து நிலையம் அருகில், தமிழக  அரசால் புதிய குடியிருப்பு ஏற்படுத்தப் பட்டு, பேருந்து நிலையத்திற்கு நிலம்  வழங்கியவர்கள் குடியிருக்க வீடு ஒதுக்கப்  பட்டுள்ளது. அந்த குடியிருப்புக்கும் குடிநீர் வருவதில்லை. இதேபோல் பழைய பேருந்து நிலை யத்திற்கு, பயணிகள் அதிக அளவில் நாள்  தோறும் சென்று வருகின்றனர். அங்கு,  குடிநீர் வழங்குவதற்காக வைக்கப் பட்டுள்ள, மினி குடிநீர் தொட்டி பராம ரிப்பின்றி வறண்டு கிடக்கிறது. இதனால் பழைய பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். எனவே, பேருந்துநிலைய குறைகளைக் களைய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.