ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு
முயன்ற மாற்றுத்திறனாளி வாலிபர்
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வட்டம், நாட்டார்மங்கலம் அருகே உள்ள பள்ளிக் குளம் பகுதியைச் சேர்ந்த பூபாலன் மகன் மணிகண்டன் (42) மாற்றுத்திறனாளியான இவர் தனது தாத்தாவுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மனைவி கோவிந்தம்மாள் என்பவர் பெயரில் பட்டா மாற்ற நடவடிக்கை மேற் கொண்டார். இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத் தில் நிலுவையில் உள்ளது இதற்கிடையில் இந்த நிலத்தை திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தினர் மூலம் தனக்கு சொந்த மாக்கி கொள்ள எதிர்தரப்பினர் முயல்வதாக கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மணிகண்டன் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தார். திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து மருத்து வமனைக்கு அழைத்துச் சென்றனர். மாற்றுத் திறனாளி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.