சென்னை, ஆக.22- அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் 3 முறை எழுதியும் தேர்ச்சி பெறாத, 50 வயதைக் கடந்த மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர் களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதி லிருந்து விலக்களித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமாக பரிசீலித்து, அதனை ஏற்று அரசுத் துறை வேலை வாய்ப்பு களில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர். அதன்படி பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் பாதிப்பு, கற்றல் குறைபாடு, மன வளர்ச்சி குன்றியவர்கள், புற உலக சிந்தனை யற்ற மற்றும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அந்தந்த பதவிகளுக்குரிய உரிய துறை தேர்வில் இருந்து நிபந்தனையுடன் விலக்களித்து அரசு ஆணையிடுகிறது.
சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 50 வயதுக்கு குறையாதவராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற குறைந்தது 3 தடவை களாவது முயற்சி செய்திருக்க வேண்டும். இதற்கு அத்தாட்சியாக பணிப் பதிவேட்டில் விவரம் இருக்க வேண்டும் அல்லது இது குறித்து நுழைவு சீட்டுகளை வைத்து சம்பந்தப்பட்ட அலுவலர் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.