சென்னை, ஜூன் 7- சென்னை விமான நிலை யத்தில் முகத்தை அடையா ளம் காணும் வகையில் டிஜியாத்ரா தொழில்நுட்ப வசதி அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக சென்னை விமான நிலையம் உள்ளது. இங்கி கிருந்து உள்நாடு, வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை விமான நிலை யத்தில் இருந்து தினசரி ஏராளமான பயணிகள் பயணம் செய்கின்றனர். உள் நாடு, வெளிநாட்டு பயணி கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் முகத்தை அடையாளம் காணும் வகையில் டிஜி யாத்ரா தொழில்நுட்பம் அறி முகப்படுத்த ப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயணிகள் தங்களது பாஸ்போர்ட், ஆதார் அட்டை அல்லது பிற ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் காட்ட வேண்டிய தேவை யில்லை. பயணிகள் தங்க ளது முகத்தை மட்டும் காட்டி னால் போதும். இதனால் பயணிகள் விமான நிலை யத்தில் காத்திருக்கும் நேரம் குறைகிறது.