சென்னை, ஆக. 20 - பணி நிரந்தரம் கோரி செவ்வா யன்று (ஆக.20) மாநிலம் முழு வதும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினர்.
மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடை யாளங்கண்டு நிர்வாகமே நேரடி யாக தினக்கூலி வழங்க வேண்டும். நிரந்தரத் தன்மை வாய்ந்த பணியிடங்களில் 2 ஆண்டுகளில் 480 நாட்கள் பணி முடித்த ஒப்பந்த ஊழியர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தடை செய்யப்பட்ட 19 இடங் களில் பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளங் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்கள் நிரந்தரம் செய்யப்படு வார்கள் என்ற தேர்தல் வாக்கு றுதியை திமுக அரசு நிறை வேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி 54 மையங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
நஷ்டத்திற்கு யார் காரணம்?
மத்திய சென்னை மேற் பார்வை பொறியாளர் அலுவல கம் முன்பு நடைபெற்ற போரா ட்டத்தில் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன் உரையாற்றினார்.
60 ஆயிரம் காலிப் பணி யிடங்கள் உள்ள போதும், மக்க ளுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது என்றால், அதற்கு ஒப்பந்த ஊழியர்கள் தான் கார ணம். அவர்களுக்கு பணி நிரந்த ரம் வழங்க வேண்டும் என்ற நீதி மன்றத் தீர்ப்பை- மின்வாரிய நட்ட த்தை காரணம் காட்டி- அரசு அமல்படுத்த மறுக்கிறது. மின் வாரிய நட்டத்திற்கு காரணம் ஊழியர்களா, என்ன?
அடுத்த கட்ட போராட்டம்
தற்போது மின்வாரியத்தின் அனைத்துப் பிரிவுகளையும் அவுட்சோர்சிங் செய்து, தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனவே தான், புதிய நியமனங்களை செய்ய மறுக்கின்றனர். பணிச் சுமையோடு ஊழியர்கள் பணியாற்றுவதால், ஆகஸ்ட் 1 முதல் 14 வரையிலான 15 நாட் களில் மட்டும் 11 பேர் விபத்துக்கு உள்ளாகினர்; 7 பேர் இறந்துள்ள னர். பணி நியமனம், நிரந்தரம் செய்வதில் அரசு இனியும் கால தாமதம் செய்யுமானால் போராட்டங்கள் வெடிக்கும். அடுத்தகட்ட வலுவான போராட்டத்திற்கு தயாராவோம்.
இவ்வாறு எஸ். ராஜேந்திரன் கூறினார்.
மத்திய சென்னை கிளைத் தலைவர் வி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி. திருவேட்டை, மத்திய அமைப்பின் மாநிலப் பொருளாளர் வெங்கடேசன், துணைத் தலைவர் எம். தயா ளன், செயற்குழு உறுப்பினர் கவுரி, கிளைப் பொருளாளர் முருகவேல் உள்ளிட்டோர் பேசினர்.