tamilnadu

img

மின்வாரியத்தில் பணி நிரந்தரம் கோரி தர்ணா

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு நிர்வாகமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று (ஆக.20) தென்சென்னை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா நடத்தினர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தென் சென்னை கிளை-1ன் தலைவர் வி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் இ.விஜயலட்சுமி, சென்னை மண்டல செயலாளர் ஏ.முருகானந்தம், கிளைச் செயலாளர் டி.பண்டாரம் பிள்ளை, பொருளாளர் எஸ்.குமார், சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் பேசினர்.