தமுஎகச திருவள்ளூர் மாவட்ட தலைவர் தனுஷ்கோடி காலமானார்
திருவள்ளூர், ஜூன் 14- தோழர் தனுஷ்கோடி தமிழ்நாடு அரசு அச்சக துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கும்பிடிப்பூண்டியில் வசித்து வந்த அவர் இயல்பாகவே இடது சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார். மூடநம்பிக்கைக்கு எதிரான சிந்தனை தான் அவரை மேலும் இடதுசாரி பக்கம் இழுத்து வந்தது. கும்மிடிப்பூண்டி தமுஎகச-வில் இணைந்த அவர் திருவள்ளூர் மாவட்ட தலைவர் என்கிற நிலைமைக்கு உயர்ந்தார். தொடர்ச்சியான வாசிப்பு தன்மையால் புலனம், இணையம், முகநூல், அச்சு நூல் என்று அனைத்திலும் வாசிக்கவும் புதிய, புதிய கருத்துகளை தனது தேடல்களால் செயல்வடிவம் தந்தார். "முதல் எழுத்து" என்ற மின் இதழை திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக இடைவெளி இன்றி கொண்டு வந்தார். தோழர் தனுஷ்கோடி தமுஎகச இலக்கிய அரங்கம் மட்டுமன்றி தமிழக அளவில், பல நாட்டு இலக்கிய அரங்கு களிலும் பங்கேற்று சந்தப்பாமணி, மரபுக் கவி வேந்தன் போன்ற பல்வேறு பட்டங்களை வென்றவர். இவரது கவிதை தொகுப்பு பறவை குறித்த கட்டுரைகள் என 3 நூல்களை கும்மிடிபூண்டியில் வெளி யிட்டவர். இந்த நிலையில் தோழர் தனுஷ்கோடி சனிக்கிழமையன்று (ஜூன் 14), அதிகாலை கால மானார். அவரின் உடலுக்கு தமுஎகச மாவட்டச் செய லாளர் கி.பாரி,மாவட்ட பொருளாளர் தேசன், மாவட்ட துணைச் செய லாளர்கள் மு.மதன், வி.அந்தோணி, மாவட்ட துணைத் தலைவர்கள் கவிஞர்.சி.சுரேஷ், பி.அருள், சூ.செந்தில்குமார், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் பி.ஜெய நாராயணன், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் டி.கோபால கிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் இ.ராஜேந்திரன், விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசி நாராயணன், கட்டுமான சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எம்.சி.சீனு, வி.ஆர்.லட்சுமணன், வாலி பர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ப.லோக நாதன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரிய பிரகாஷ் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். கும்மிடிப்பூண்டியில் உள்ள மயானத்தில் ஞாயிறன்று தகனம் செய்யப்பட வுள்ளது.