சென்னை, நவ. 2- தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்கப் படுத்தி நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித் துள்ளது.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டம் நடத்தி வரு கிறது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு விரைவில் ஒப்புதல் அளித்து நடவடிக்கை எடுக்க அண்மையில் தமிழ்நாடு வந்த குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினார்.
நீட் தேர்வு ரத்து என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தாலும் தற்போது மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு செல்ல நீட் அவசி யம் என்பதால் அதற்கு அவர்களை தயார்படுத்தும் வேலையும் நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளில் பயிலும் வசதி படைத்த மாணவர்கள் நீட் பயிற்சிக் காக கோச்சிங் சென்டர்கள் சென்று படிக்கின்றனர். நீட் பயிற்சி என்பது மிகப்பெரிய தனி வணிக மாக உருவெடுத்து வருகிறது.
இந்தச் சூழலில் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஏழை அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. இதை மாற்றும் விதமாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது.
அதனடிப்படையில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4 மணி முதல் 5.30 வரை 1.30 மணி நேரம் பாடவாரியாக மாணவர்க ளுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை நாட்களில் வட்டார அளவில் மாணவர்க ளுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படும். நீட் பயிற்சியில் பங்கு பெற மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.