tamilnadu

ஆதிதிராவிடர் -பழங்குடியினர் மேம்பாட்டு செயல்திட்ட சட்ட முன்முடிவு அறிமுகத்திற்கு தீஒமு வரவேற்பு

சென்னை, பிப். 21 - தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநிலத் தலைவர் த.  செல்லக்கண்ணு, பொதுச் செய லாளர் கே. சாமுவேல்ராஜ் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கை: 

தமிழ்நாடு சட்டப் பேரவை யில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்  குடியினர்க்கான மேம்பாட்டு செயல்திட்ட சட்ட முன்முடிவு  அறிமுகம் செய்யப்பட்டுள ளதை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இத்தகைய  சட்டத்தை வலியுறுத்தி 15 ஆண்டுகளாக தொடர்ந்து இயக்கங்களை நடத்தி வந்  துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7, 2023  அன்று ஒரு வரைவுச் சட்டத்தை உருவாக்கி தமிழ்நாட்டில்  உள்ள பல்வேறு பட்டியல் சாதி,  பழங்குடி அமைப்புகள், அம்  பேத்கரிய, சமூகநீதி இயக்கங் கள் ஆகியவற்றின் கூட்டு ஆவ ணமாக தமிழ்நாடு அரசின்  அமைச்சர்கள், அதிகாரிகளி டம் சமர்ப்பித்தது.

அத்தகைய  நீண்ட நாளைய கோரிக்கை நிறைவேறும் தருணம் வந்துள் ளது குறித்து மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது. இத்தகைய அம்சங்களை இணைத்து சட்டம் நிறைவேற் றப்பட வேண்டும்.  சட்டத்தை நிறைவேற்றிய உடனே விதி களையும் விரைந்து உருவாக்க வேண்டும்.

கூடுதல் அம்சங்களையும் இணைத்து சட்டத்தை பலப்படுத்த வேண்டும்!

தமிழக அரசின் சட்டமுன்வடிவை வரவேற்கும் அதேநேரத்தில், இந்த சட்ட வரைவு பலப்படுத்தப்பட கீழ்க்காணும் அம்சங்கள் அதில் இணைக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.

*    ஆதி திராவிடர் பழங்குடியினர் மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் அருந்ததியர்க்கான உள் நிதி ஒதுக்கீட்டை வரையறுக்க வேண்டும். தலித் கிறிஸ்தவர்களை உள்ளடக்குவதையும் பரிசீலிக்க வேண்டும். 
 

*    ஒதுக்கீடு செய்யப்பட்டும் செலவிடப்படாத தொகை அடுத்த ஓராண்டுக்கு மட்டும் எடுத் துச் செல்லப்பட வேண்டும் என்று சட்ட வரைவில் உள்ளது.   தவிர்க்க இயலாத சூழல்கள் இருப்பின் சட்டம் முன் மொழிந்துள்ள “தமிழ் நாடு மாநில மன்றத்தில்” விவாதிக்கப்பட்டு அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்றும், எப்படி இருப்பினும் எந்த சூழ்நிலையிலும், ஒதுக்கப்பட்ட தொகை காலாவதியாகாது (Non Lapseable), மடைமாற்றம் ஆகக் கூடாது  (Non Divertible) என்ற உறுதிமொழிகளை உறுதி செய்கிற வகையிலும் சட்டம் வடிவமைக்கப்பட வேண் டும். தவறாக மடை மாற்றம் தொகை கண்டுபிடிக்கப்பட்டால் அது ஆதி திராவிடர் பழங்குடியினர் மேம்பாட்டு செயல் திட்ட நிதிக்கு மறுபடியும் கொண்டு வரப்படவேண்டும். பொதுத் திட்டங்களில் பட்டியல் சாதி, பழங்குடி பயன்பெற்றால் ஆதி திராவிடர் பழங்குடியினர் மேம்பாட்டு நிதியில் இருந்து எடுக்கப்படும் என்பதும், பகுபடா உள் கட்டமைப்பு பணிகளை உள்ளடக்கிய திட்டங்களுக்கும் ஆதி திராவிடர் பழங்குடியினர் மேம்பாட்டு நிதியில் இருந்து எடுக்கப் 
படுமென்றும் வரைவில் உள்ள அம்சங்கள் மடை மாற்றத்திற்கு வழிவகுத்து விடும். அவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படக் கூடாது என்ற வகையில் மாற்றம் தேவை. 

 

*    ஆதி திராவிடர் பழங்குடியினர் மேம்பாட்டு நிதி நெறி மீறல்களுக்கான, தண்டனைகள், சிறந்த அமலாக்கத்திற்கான ஊக்கப் பரிசு
களை உள்ளடக்கிய அம்சங்கள் சட்டத்தில் 
இணைக்கப்பட வேண்டும்.

 

*    ஆதி திராவிடர் பழங்குடியினர் மேம்பாட்டு  நிதியின் கீழ் அமலாக்கப்படும் திட்டங்களுக் கான ஒப்பந்தங்கள், வேலைவாய்ப்புகள் ஆகியவற்றிலும் அரசு கொள்முதல்களிலும் பட்டியல் சாதி, பழங்குடியினர் பெரும் 
பங்கினைப் பெறும் வகையிலான அம்சங் கள் சட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். 

 

*    மாநில வழி நடத்தும் அமைப்பாக முன் மொழியப்பட்டுள்ள “தமிழ்நாடு மாநில மன்றத்தில்” ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே பதவி வழி அல்லாத உறுப்பினராக இருப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பேர் கொண்ட அக்குழுவில் ஒரே ஒருவர் மட்டுமே பதவி வழி அல்லாத உறுப்பினராக இருப்பது போதுமானதல்ல. பதவி வழி அல்லாத உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படுவதோடு அதில் உரிய அளவில் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படவும் வழி வகுக்க வேண்டும்.
 

*    தமிழ்நாடு மாநில மன்றம் ஆண்டுக்கு ஒரு முறை கூடும் என்று இருப்பதை 6 மாதங்களுக்கு ஒரு முறை என்று மாற்ற வேண்டும். ஆண்டுக்கு மூன்று முறை அதிகாரமளிக் கப்பட்ட குழு கூடும் என்பதைகாலாண்டுக்கு 
ஒரு முறை என்று மாற்ற வேண்டும். அப் போதுதான் திட்ட அமலாக்கத்தில் இடைக் கால தலையீடுகளை செய்ய இயலும்.