tamilnadu

img

தையல் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழகஅரசு அறிவித்த ஊரடங்கு கால நிவாரணத்தை, விண்ணப்பித்த அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க கோரி சென்னை மற்றும் புறநகர் தையல் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (ஜூலை 9) சென்னை மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எஸ்.டி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தையடுத்து, சங்க நிர்வாகிகளை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.