tamilnadu

img

பாலஸ்தீன மக்களை இனப் படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை, ஆக.6 - பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

பாலஸ்தீன மக்களை இனப் படுகொலை செய்து வரும் இஸ்ரேல்  அரசை கண்டித்தும், ராணுவத் தாக்கு தலை உடனடியாக நிறுத்த வேண்டும். பாலஸ்தீனத்தை தனிநா டாக அங்கீகரிக்க வேண்டும். இஸ்ரே லுக்கு ஆயுதங்கள் வழங்கி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித் தும், அணு ஆயுதங்களையும், பேரழிவு ஆயுதங்களையும் பூவு லகில் இருந்து முழுமையாக ஒழித்திட வேண்டும் என வலியுறுத்தி  ஹிரோஷிமா தினமான செவ்வா யன்று (ஆக.6) சென்னையில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம், தொழிற்சங்கங்கள், வெகு ஜன இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின. 

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா, சிபிஐ துணைச் செயலாளர் மு.வீர பாண்டியன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.இ. சத்யா, விசிக துணைப் பொதுச் செய லாளர் எஸ்.எஸ்.பாலாஜி, சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன், மே 17 இயக்க ஒருங்கிணைப் பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.