tamilnadu

img

மாற்று இடம் தராமல் குடியிருப்பு இடிப்பு

மாற்று இடம் தராமல் குடியிருப்பு இடிப்பு

சென்னை, ஜூன் 14 - குளக்கரையோரம் 4 தலைமுறையாக வசித்து வந்த குடும்பத்திற்கு, மாற்று இடம் வழங்காமல் குடியிருப்பு இடிக்கப் பட்டுள்ளது. செம்பாக்கம் ஊராட்சியாக இருந்த போது சமூகசேவகர் எம்.முருகேசனுக்கு அன்றைய தலைவர் குளக்கரையோரம் இடம் ஒதுக்கி கொடுத்தார். 4 தலை முறையாக அவரது குடும்பம் அங்கு வசித்து வந்தது. அதற்கான வரிகளையும் அவர் செலுத்தி வந்தார். செம்பாக்கம் ஊராட்சி, பேரூராட்சி, நக ராட்சியாக மாறி தற்போது மாநகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது. இந்நிலையில் குளக்கரை அருகில் குடியிருப்பு இருப்ப தால், நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வெள்ளியன்று (ஜூன் 13) அவரது குடி யிருப்பு மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர். இதனால் முருகேசன் வீடின்றி நிர்கதியாக்கப்பட்டுள்ளார். மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சிபிஎம் தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, பல தலைமுறையாக வசித்து வந்த குடும்பத்தை அதே இடத்தில் மறு குடியமர்வு செய்ய வேண்டும் அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் மாற்று குடியிருப்பு கேட்டு மாநகரட்சி ஆணையரிடம் எம்.முருகேசனும் மனு அளித்துள்ளார்.