tamilnadu

இஸ்லாமியர் வீடுகள் இடிப்பு சிறுபான்மை மக்கள் நலக் குழு கண்டனம்

சென்னை, ஜூன் 13 - போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி வீடுகளை இடிப்பதற்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நலக்குழுவின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, பொதுச்செயலாளர் எம். ராமகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முகம்மது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்த அவதூறான கருத்துக் களுக்காக பாஜக, அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்த பின்னரே பாஜக கண்  துடைப்பு நடவடிக்கை எடுத்துள் ளது. செய்தி தொடர்பாளர்கள் மீது கிரிமினல் சட்டப்படி வழக்கு  தொடர்ந்து கைது செய்ய  வேண்டும் என்று பல்வேறு  அரசியல் கட்சிகளும், இஸ்லா மிய அமைப்புகளும் வலியுறுத்தி உள்ளன. இஸ்லாமியர்கள் போராட்டங்கள் நடத்தி பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால் கைது செய்யப்படவில்லை. எனவே, பாஜக செய்தி தொடர்பாளர்களை கைது செய்யக்கோரி நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஈடுபட்ட வர்கள் மீது பாஜக அரசு துப்பாக்கி சூடு, தடியடி போன்ற  அடக்குமுறைகளை ஏவி  வருகிறது. மேலும், உத்தரப்பிர தேசத்தில் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞர்களை காவல்நிலையத்தில் வைத்து  கடுமையாக தாக்கும் காட்சிக ளும், இஸ்லாமியர்களின் வீடு களை காவல்துறை துணையோடு புல்டோசர் வைத்து இடிக்கும் காட்சிகளும் பார்ப்பவர்களை பதற வைக்கிறது. இத்தகைய அரச பயங்கரவாதம் கண்டனத் துக்குரியது. பாஜக அரசின் சட்ட விரோத மான மனித உரிமை மீறலை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்  நலக்குழு வன்மையாக கண்டிப்ப தோடு, அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.