tamilnadu

டெல்டா, தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச.16 - தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் ஞாயிறன்று ( டிச. 17) ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக் கோட்டை, இராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். மேலும் விழுப்புரம், தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்ந்து டிச. 18 ஆம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில், டிச. 19 ஆம் தேதி குமரி, நெல்லை, தூத்துக் குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள தாக என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.