சென்னை, பிப். 11 - பாசிச பாஜகவை வீழ்த்திடவும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியை மகத்தான வெற்றிபெறச் செய்திடவும் தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநிலக்குழு கூட்டம் 10.02.2024 அன்று சென்னை யில் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி தலைமையில் துவங்கி நடை பெற்றது.
இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிர காஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், பெ. சண் முகம் மற்றும் மாநிலச் செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு:
மக்கள் மீது மோடி அரசு இரட்டைத் தாக்குதல்
ஒன்றிய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக வகுப்புவாதம் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் என்ற இரட்டை இலக்கோடு செயல் பட்டு வருகிறது. வறுமை, வேலை யின்மை, விலைவாசி அதிகரித்துக் கொண்டே போகிறது. அநியாய ஜிஎஸ்டி வரிகள், பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு விலைகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்திற்கு கொண்டுசென்று, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது கொடூரமான தாக்குதலை மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு தொடுத்து வருகிறது.
தனியாருக்குப் போன
கல்வி - சுகாதாரம்
அதுமட்டுமின்றி, கல்வி-சுகா தாரம் தனியாருக்கு தாரைவார்ப்பு, விவசாயிகள் - விவசாயத் தொழி லாளர்கள் - உழைப்பாளிகளுக்கு மானியங்கள் வெட்டு, மநுவாதக் கருத்தியலை பரப்பி சிறுபான்மை மக்கள் மற்றும் பட்டியலின பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்கள், பெண்கள் - குழந்தைகள் மீது வன்முறைகள், குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி உழைப்பாளி மக்கள் மீதான சுரண்டல்கள், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என இந்தியா வின் பன்முகத் தன்மையை சிதை த்தும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களான மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாடு போன்றவைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்தும் எதேச்சதிகார தாக்குதலை தொடுத்து வருகிறது.
நீட், எய்ம்ஸ் விவகாரங்களில் தமிழகத்திற்கு வஞ்சகம்
தமிழ்நாட்டிலும் இந்தித் திணிப்பு, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மறுப்பு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தை துவக்க மறுப்பு, மிக்ஜம் புயல் மற்றும் கனமழை வெள்ளம், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதி யிலிருந்து ஒரு ரூபாய் கூட ஒதுக்காதது, இலங்கை கடற்படை யினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காதது, இரண்டாம் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திற்கு அனுமதி தர மறுப்பது, அமலா க்கத்துறை, வருமான வரித்துறை, ஒன்றிய புலனாய்வுத்துறை ஏவி விடுவது, ஆளுநரை பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை செயல்பட விடாமல் முடக்குவது, மக்கள் நலச் சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் ஒப்புதல் தர மறுப்பது என்று வஞ்சகப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக-வை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் முற்றாக முறியடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மக்களை வேண்டுகிறது.
பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் திருத்தச் சட்டங்கள், குடி யுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட அனைத்து மக்கள் விரோதச் சட்டங் களையும் அதிமுக நாடாளுமன்றத் தில் ஆதரித்தது. தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப் பகிர்வு, மொழித் திணிப்பு, மாநில உரிமைகள் மறுப்பு என ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் இழைப்பதை எதிர்க்காத கட்சிதான் அதிமுக.
எனவே, இந்த மக்களவைத் தேர்தலில் பாசிச பாஜகவை வீழ்த்தும் போராட்டத்தை பலவீனப் படுத்தும் வகையில்- எதிர்ப்பு வாக்கு களை பிரித்து மறைமுக சேவை யாற்றும் அதிமுக போன்ற கட்சி களையும் படுதோல்வி அடையச் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக மக்களை வேண்டுகிறது.
இவ்வாறு தீர்மானத்தில் கூறப் பட்டுள்ளது.