சென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் நோய் தொற்றால் மான் உயிரிழந்துள்ளதாக சென்னை ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஆந்த்ராக்ஸ் நோய் தொற்றால் மான் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இரண்டு மான்களுக்கு ஆந்த்ராக்ஸ் நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மான்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.முன்னதாக 4 மான்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
முதல்கட்ட தகவலில் நாய்கள் மூலம் ஆந்த்ராக்ஸ் நோய் பரவியிருப்பதாக தெரிகிறது. இதன்காரணமாக, ஐஐடி வளாகம் மற்றும் கிண்டி தேசியப் பூங்காவில் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பூங்கா, ஐஐடி வளாகத்தில் விலங்குகளை யாரும் தொட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆந்த்ராக்ஸ் தொற்றானது விலங்கில் இருந்து மனிதனுக்குப் பரவக்கூடிய ஒன்றாகும்.
ஆந்த்ராக்ஸ் என்பது பாசிலஸ் ஆந்த்ராசிஸ் எனப்படும் கிராம்-பாசிட்டிவ் பாக்டீரியாவால் ஏற்படும் தீவிர தொற்று நோயாகும்.