சென்னை, ஜூன் 20- தமிழ்நாடு சட்டப்பேரவையின் 10 நாள் கூட்டத்தொடர் வியாழக்கிழமை (ஜூன் 20) துவங்கிய நிலையில், மானியக் கோரிக்கை கள் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
நீர்வளத்துறை
ஜூன் 21 அன்று காலையில் நீர்வளத் துறை, இயற்கை வளங்கள் துறை, தொழி லாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மீது விவாதம் அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெறுகிறது.
மாலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகியவை எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
உயர் கல்வித்துறை
சனிக்கிழமை (ஜூன் 22) காலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது. மாலையில் வேளா ண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால் நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், பால் வளம் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது.
24-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை யில் உயர்கல்வித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, பள்ளி கல்வித்துறை மீதும், அன்று மாலையில் நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி துறைகள் மீதும் மானிய கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது.
நெடுஞ்சாலைத்துறை
25ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனத் துறைகள் மீதும், அன்று மாலை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள், இயக்க ஊர்திகள் குறித்த சட்டங்கள் - நிர்வாகம், போக்கு வரத்து துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதும் மானிய கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது.
26-ந் தேதி (புதன்கிழமை) காலை திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, எரி சக்தித்துறை, நிதித்துறை, மனிதவள மேலா ண்மைத் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும் துறை மீதும், அன்று மாலை சுற்றுலா, வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திர பதிவு, இந்து சமய அறநிலையத்துறை மீதும் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கிறது.
இளைஞர் நலன் மற்றும் காவல்துறை!
27 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை யில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மீதும், அன்றைய தினம் மாலையில் கூட்டு றவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதும் மானிய கோரிக்கைகள் விவா தம் நடக்கிறது.
28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை யில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்கள் துறை, மருத்துவம் மற்றும் மக் கள் நல்வாழ்வுத்துறை, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மீதும், அன்று மாலை காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை கள் விவாதம் நடக்கிறது.
முதலமைச்சர் பதில் உரை
29 ஆம் தேதி (சனிக்கிழமை) காலையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அவர் பேசி முடித்ததும், இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் சட்ட திருத்த மசோதாக்கள் நிறை வேற்றப்படுகின்றன. அத்துடன் சட்ட மன்றக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.