tamilnadu

img

ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்: அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...

சென்னை:
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் (அக்.18) அக்கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் ராஜவர்மன் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய ராஜவர்மன், அதிமுக சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந் திர பாலாஜி, கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார் என அதிர்ச்சிக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்து காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்சி நடவடிக்கை எடுக்கும்: ஜெயக்குமார்
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டியது ஆளுநரின் கட்டாயம். விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.முதல்வருடன் ஸ்டாலின் சந்திப்பில் உள்நோக் கம் கிடையாது. இது ஒரு அரசியல் நாகரிகம் என்றும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் அவர் கூறினார்.அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான, சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் புகார் மீது கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.