tamilnadu

img

கொல்லங்குடி கருப்பாயி மறைவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் மறைவிற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் நாட்டுப்புற இசைக் கலைஞரும், கலைமாமணி விருதுபெற்றவருமான கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியைச் சேர்ந்த கருப்பாயி அம்மாள், இயல்பிலேயே நாட்டுப்புற பாடல்களை பாடும் திறன் பெற்றிருந்தார். முகவை கலைக்குழுவில் அங்கம் வகித்த அவர், தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் பாடியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மாநாட்டிலும் பாடியுள்ளார். சில திரைப்படங்களிலும் பாடி நடித்துள்ளார். அவர், கட்சி உறுப்பினராகவும் இருந்துள்ளார். அவரது மறைவு முற்போக்கு கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.