tamilnadu

img

அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி 42 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி 42 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வு 2023 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வழங்கப்பட்ட உள்ளது.

இதன் மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.