மத்திய அரசின் ரயில்வேயை சீரழிக்கும் 100 நாள் செயல் திட்டத்தைக் கண்டித்தும், ஐசிஎப் உள்ளிட்ட 7 ரயில்வே உற்பத்தி தொழிற்சாலைகள், பெரம்பூர், கேரேஜ், லோகோ, பொன்மலை உள்ளிட்ட 44 ரயில்வே ஒர்க்ஷாப்புகளை ரோலிங் ஸ்டாக் கம்பெனியாக மாற்றிடும் திட்டத்தைக் கைவிட வேண்டும், பயணிகள் சரக்கு ரயில்களை கார்ப்ப்ரேட்டுகள் இயக்கி கொள்ளையடிப்பதை அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிஆர்இயு சார்பில் மூர்மார்க்கெட் வளாகம் அருகே உதவி பொதுச் செயலாளர் வி.அரிலால் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் அபிமன்யூ, பேபி ஷகிலா, ஆர்.இளங்கோவன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.