tamilnadu

img

ஊரடங்ககை மீறும் வாகனங்கள்: தீவிர கண்காணிப்பில் காவல்துறை

 சென்னை, ஏப்.23- சென்னையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் பிற்பகலுக்கு பிறகு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 500க்கும் மேற்பட்டவர்கள் ஒவ்வொரு நாளும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சென்னை மாநகர் முழுவதும் 33 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையி னர் ஆய்வு நடத்துகின்றனர். பிற்பகலுக்கு பிறகு சாலைகளில் தேவையில்லா மல் வாகனங்களில் சுற்றுபவர்களை கைது செய்வதுடன், அவர்களின் வாகனங்களை பாரபட்ச மின்றி பறிமுதல் செய்ய காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பிடிபடும் வாகனங்கள் உடனடியாக பொதுமக்கள் திரும்ப பெறமுடியாது. ஊரடங்கு பரபரப்பு முடிந்த பிறகே பொதுமக்கள் தங்களது வாகனங்களை பெறமுடியும். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையால் சென்னையில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்க ளை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாகியு ள்ளது.

வெளியில் வாகனங்களில் சுற்றுபவர் களை பிடிப்பதுடன் அவர்களது வாகனங்களை பிடித்து, காவல் நிலையங் களிலேயே நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் இனி வெளியில் சுற்றுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இல்லையென் றால் கொரோனா பரபரப்பு எப்போது அடங்குகிறதோ அப்போதுதான் தங்களது வாகனங்களை திரும்பப் பெற முடியும். இதனை கருத்தில் கொண்டு பொது மக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்று வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அப்போதுதான் காவல்துறையினரின் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியும். இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 80 சதவிகித வாகனங்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக சொந்தமாக கார்கள் வைத்திருப்பவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தினமும் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனை கட்டுப்படுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டுள்ளது. இதன்படி தேசிய நெடுஞ்சாலைகளி லும் தீவிரமாக கண் காணிக்க காவல்துறை யினர் முடிவு செய்துள்ளனர்.