tamilnadu

img

அண்ணாமலையின் அரைவேக்காட்டுத் தனம் - கே.பாலகிருஷ்ணன்

பிரதமர் மேடை அலங்கரித்து திரும்ப நடந்தது கொலு மொம்மை விழா அல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பாஜக தமிழக தலைவர்  அண்ணாமலைக்கு பதிலடி தெரிவித்துள்ளார். 
சென்னையில் நடந்த விழாவில் பாரத பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நீட் ஒழிப்பு, கச்சத்தீவு மீட்பு, தமிழக நலத்திட்டங்களுக்கான நிதியை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பலகோரிக்கைகளை முன் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை  "நரேந்திர மோடி பிரதமராக வந்திருப்பது பாஜக நிகழ்ச்சிக்காக அல்ல. பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் அரசியல் செய்துள்ளார்" என்று தெரிவித்திருந்தார். 
பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரைக்காக தான் வெட்கப்படுவதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது டுவிட்டர் பதிவில்,
பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரைக்காக தான் வெட்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டு மக்களின் நியாயமான கோரிக்கைகளை பிரதமரிடம்  முன்வைப்பது முதலமைச்சரின் கடமை. அதைத்தான் அவர் செய்திருக்கிறார். மாறாக மேடையை அலங்கரித்து திரும்புவதற்கு நடந்தது ஒன்றும் கொலு பொம்மை விழா அல்ல. தமிழ் மொழியைப் பற்றி அவ்வப்போது வாய்ஜாலம் காட்டும் பிரதமர், சம உரிமைக்கான கோரிக்கை பற்றியும் கூட எதுவும் பேசவில்லை. அண்ணாமலைக்கு இதைப் பற்றியெல்லாம் அக்கறை உண்டா? முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றி எதையும் சொல்லாத பிரதமரின் உரைதான் ஏமாற்றமளிப்பதாக உள்ளது.
ஆனால், அதை மறைத்து - தமிழக மக்களின் முக்கியமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்த முதலமைச்சரின் உரையினை அண்ணாமலை விமர்சிப்பது அவரின் அரைவேக்காட்டுத் தனத்தையே காட்டுகிறது. இவ்வாறு டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

;