tamilnadu

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்துள்ளது

சென்னை, மார்ச் 18 - அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமையன்று (மார்ச்16) சென்னை சைதாப்பேட்டையில் சர்வதேச மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி பேசிய  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி, “மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் வெறுப்பு அரசியலால் மிகக் கடு மையாக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். சமத்துவத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதி ராக ஒன்றிய பாஜக அரசு உள்ளது என்றார்.

2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவண அறிக்கையில், 4 லட்சத்து 45 ஆயிரத்து 256 குற்றங்கள் பெண் களுக்கு எதிராக பதிவாகியிருக்கிறது. அதில் 65 ஆயிரத்து 743 குற்றங்கள் பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் நிகழ்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய சுகந்தி, குழந்தைகள், தலித்துகள், பழங்குடிகளு க்கு எதிராக அதிகளவு குற்றங்கள் பதிவா கும் மாநிலங்களாக பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களே உள்ளன” என்றார்.

மணிப்பூரில் பழங்குடியினப் பெண் களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தது, மல்யுத்த வீராங்கனைகள் மாதக் கணக்கில் போராடி வருவது போன்றவற் றை சுட்டிக்காட்டிய அவர், பாசிச மநுவாதிக ளான பாஜக ஆட்சியாளர்களை நாடாளு மன்ற தேர்தலில் வீழ்த்துவோம் என்றார்.

கோரிக்கை சாசனம்
இந்த நிகழ்வில் தேர்தல் கோரிக்கை சாசனம் -2024ஐ இந்திய மாதர் தேசிய சம்மேளன தலைவர் ஜி.மஞ்சுளா வெளி யிட, மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமரி பெற்றுக் கொண்டார்.

அப்போது பேசிய ஏ.எஸ்.குமரி, “தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்க ளைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றோம். பெண்களோடு களத்தில் நின்று செயல்படும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர்கள் உ.வாசுகி, பி.சுகந்தி போன்றோரிடம் அவ்வப்போது அதற்கான ஆலோசனைகளை பெறுகி றோம். பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுக்க 1930 என்கிற தொடர்பு எண்ணை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதனை இளம்பெண்களிடம் அதிகளவில் கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.