கூட்டுறவு வங்கிகளில் கடன் மேளா
சென்னை, ஜூலை 7- கூட்டுறவுத்துறை தினத்தை முன் னிட்டு தமிழக கூட்டுறவுத்துறை அமைச் சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது-
கூட்டுறவு வங்கிகள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், சமூக மேம் பாட்டிற்காகவும் பயிர்க் கடன், கறவை மாட்டுக் கடன், நகைக் கடன், சுய உதவி குழுக் கடன், சிறுவணிகக் கடன், மகளிர் தொழிற்முனைவோர் கடன், மகளிர் சம்ப ளக் கடன், வீட்டு வசதிக் கடன் போன்ற கடன்களை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கூட்டு றவுகள் அனைவருக்கும் சிறந்த எதிர் காலத்தை உருவாக்குகின்றன என்ற மைய கருத்தில் மக்களுக்கு சர்வ தேச கூட்டுறவு தினத்தைப் பற்றிய விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கி களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் மேளா, ரத்ததான முகாம், மரக்கன்று நடும் முகாம், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாஜக அண்ணாமலை பச்சோந்தி; துரோகத்தின் மொத்த உருவம்
எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
மதுரை, ஜூலை 7- அதிமுக பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி ஜூலை 7 ஞாயிறன்று மது ரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
பொதுக்குழுவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல் வத்தை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கிவிட்டோம். அவர் விசுவாசமாக இருந்ததாக வரலாறு இல்லை. 2019 இல் அவர் மகன் போட்டியிட்ட தேனியில் மட்டும்தான் வேலை பார்த்தார். மற்ற தொகுதிகளில் வேலை செய்யவில்லை. கட்சியைப் பற்றி கவலைப்படாமல் மக னைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டார். அதிமுகவில் அவர் இணைய ஒரு சதவீத மும் வாய்ப்பில்லை.
பாஜக அண்ணாமலை பச்சோந்தி. நான் துரோகி அல்ல, துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலை தான். எங்கள் தலைவர்களை அவதூறாக கீழ்த்தரமாக விமர்சித்தால் நாங்கள் எப் படி பொறுத்துக் கொள்வோம்? அண்ணா மலை கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தம் இல்லாதவர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி ஊழியர்கள் ஆக.19 இல் பேரணி
திருப்பூர், ஜூலை 7- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட் சித் துறை ஊழியர்கள் சம்மேளன (சிஐ டியு) கூட்டம் ஜூலை 7 ஞாயிறு அன்று திருப்பூரில் நடந்தது. சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.கணேசன் தலைமை யில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன், சம்மேளன பொதுச் செய லாளர் ஆர். பாலசுப்பிரமணியன், பொரு ளாளர் கே. ரங்கராஜ் உள்ளிட்ட சம்மேளன குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானம்:
தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனியார் மையத்தை கைவிட வேண்டும். அவுட்சோர்சிங் அர சாணைகள் 152 மற்றும் 139 ஐ ரத்து செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுப் படி அரசாணை 2(டி)எண்:62ன்படி தினக் கூலி ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், இ.பி.எப், இ.எஸ்.ஐ., பிடித்தங்களை நிறுவனங்களின் பங்குத் தொகையோடு தொழிலாளிகளின் கணக்கில் முறையாக செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும், மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் வாரிசு வேலை களை உடனடியாக நியமிக்க வேண்டும், ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர் உள் ளிட்ட உள்ளாட்சி ஊழியர்களுக்கு பணப் பயன்களை காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும், பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியர்களாக வேலை செய்யும் உள்ளாட்சி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று முடிவு செய்யப்பட்டது.
கள்ளச்சாராயத்தை தடுக்க நடவடிக்கை
கல்வராயன் மலையில்
புதிதாக 4 சோதனைச்சாவடி
கள்ளக்குறிச்சி, ஜூலை 7- கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. அதன்படி, கல்வராயன் மலை யில் இருந்து நகர்ப்புறங்களுக்கு கள்ளச் சாராயம் கடத்துவதை தடுக்க, மலை அடி வார பகுதிகளில் புதிதாக 4 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்வராயன் மலைப்பகுதிகளில் கள் ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க, 100-க்கும் மேற்பட்ட போலீசார் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பன்னிப்பாடி செல்லும் சாலை, வெள்ளி மலை செல்லும் சாலை, மூலக்காடு, சிறு வாச்சூர் பகுதிகளில் சோதனைச் சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சோதனை சாவடியில் 4 போலீசார் வீதம் 16 போலீ சார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.