விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நீதி, அடிப்படை வசதிகள், குடிநீர் பிரச்சனைகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பல்வேறு போரா ட்டங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளன. சாதி ஒடுக்குமுறைக்கு எதி ரான உறுதியான நிலைப்பாடு, குடிநீர் பிரச்ச னைகளுக்கான தீர்வுகள், நிலமற்ற ஏழை களுக்கு நிலவுரிமை என பல முக்கிய வெற்றி கள் கிடைத்துள்ளன. இந்த வெற்றிகள் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
பேருந்து நிழற்குடை: சாதி வெறிக்கு எதிரான வெற்றி!
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராம்பாக்கம் ஊராட்சி மன்றத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பட்டியல் இனம் மற்றும் மாற்று சாதியினர் சரிபாதியாக உள்ள னர். பொதுத் தொகுதியில் ஊராட்சி மன்ற தலை வராக பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பட்டியல் இன மக்கள் வசிக்கும் குடி யிருப்பு பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்துதான் விழுப்புரம், கட லூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கும் பேருந்து வசதி உள்ளது. மாற்று சமூகத்தினர் வசித்து வரும் குடியிருப்பு சாலை வழியாக சென்று பேருந்து நிறுத்தத்தில் பல மணி நேரம் வெட்ட வெளியில் மழை, வெயி லில் காத்திருக்க வேண்டிய அவலம் தொட ர்ந்தது.
இந்த அவல நிலையை போக்க வானூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பேருந்து நிழற்குடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதை பொறுத்துக் கொள்ள முடி யாத சாதி ஆதிக்க சக்திகள், பேருந்து நிழற்குடை அமைக்கும் கட்டுமானப் பணியை ஆரம்ப நிலையிலேயே தடுத்தனர்.
சாதி ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக கள மிறங்கிய சர்வேயர் உள்ளிட்ட அரசு அதி காரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அள வீடு செய்ய முயன்ற போது, பொது இடத்தை தங்களுக்கு சொந்தமான இடம் எனக் கூறி அளக்க விடாமல் தடுத்தனர். பொதுத் தொகுதி யில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் இரண்டு முறை ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாத சாதி வெறியர்கள், பட்டியல் இன மக்கள் பேருந்து நிறுத்தத்தில் அமர்வதை தடுக்க முயன்றனர்.
மேலும், ஊராட்சி மன்றத்தின் அனுமதி யின்றி அந்த இடத்தில் தன்னிச்சையாக கடை கள் கட்டுவதற்கு முயற்சித்தனர். சாலை யோரம் இருந்த வேப்பமர நிழலில் பட்டியல் இன மக்கள் நிற்பதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் மரக்கிளைகளை வெட்டி, வேலி அமைத்து தடுத்தனர்.
இந்த சாதி வெறி நடவடிக்கை குறித்து சிபிஎம் தலைவர்கள் வருவாய் துறை மற்றும் காவல் துறையில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஆதிக்க சாதியினரின் கட்டு மான பணிகளை தடுத்து நிறுத்தினர்.