சென்னை, ஜன. 31 - 60 ஆண்டுக்கும் மேலான பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரு மான தோழர் எஸ். ராஜசேகரன் புத னன்று காலமானார். இந்நிலையில், அவ ரது மறைவு, உழைக்கும் வர்க்கத் திற்கு பேரிழப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே. பாலகிருஷ்ணன் தனது இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்ப தாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்களில் ஒருவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரு மான தோழர் எஸ். ராஜசேகரன் (82) உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்த மளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தோழர் எஸ். ராஜசேகரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் 60 ஆண்டு களுக்கும் மேலாக பொது வாழ்க்கை யில் ஈடுபட்டவர். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்திலும், புதுக்கோட்டை மாவட்டம் பிரிந்த பிறகும் விவசாயிகள், தொழிலாளர்களுக்காக எண்ணற்ற போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர். இரண்டு முறை புதுக் கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராகவும், 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை ஆலங்குடி தொகுதி யின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு மிகச்சிறந்த மக்கள் பிரதிநிதியாக பணி யாற்றியவர்.
2013-ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பல ஆண்டுகாலம் பணி யாற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வளர்ச்சிக்கும், புதுக்கோட்டை மாவட்ட உழைப்பாளி மக்களின் நலன் களுக்காகவும் மிகச்சிறந்த முறையில் அரும்பாடுபட்டவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், உழைப்பாளி வர்க்கத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள அன்னாரது இணையருக்கும், குடும்பத் தினருக்கும், தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த வருத்தத்தை யும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.