tamilnadu

img

புறம்போக்கில் நீணட காலம் குடியிருப்போருக்கு பட்டா வழங்கிட கோரி சிபிஎம்  போராட்டம்

வீடில்லா ஏழை மக்களுக்கு இலவச குடி மனை பட்டா வழங்கிட கோரியும், நீண்டகாலமாக புறம்போக்கு நிலத்திலும் வறண்ட நீர்நிலை  புறம்போக்கு குடியிருப்போருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க கோரியும், கோவில் நிலங்களில் நீண்ட நாட்களாக குடியிருக்கும் ஏழைகளுக்கு பட்டா வழங்கிட கோரியும்  வெள்ளியன்று (மே 6) தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டக்குழுகள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தரராஜன், ஆர்.வேல்முருகன், ஜி.செல்வா உள்ளிட்டோர் கலந்து  கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.