tamilnadu

img

3ஆவது வார்டு வாக்காளர்களை வார்டு 4இல் இணைக்கக் கோரி சிபிஎம் மனு

திருவொற்றியூர், ஜன. 16- எர்ணாவூர் அண்ணா தெருவில் 28 குடி யிருப்புகளில் 122 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்கள் 3ஆவது வார்டு, பாகம்  72இல் சேர்க்கப்பட்டுள்ளனர்.  எர்ணாவூர் 4ஆவது வார்டை ஒட்டிய பகுதியாக இருக்கும் நிலையில், வார்டு 3இல்  இணைக்கப்பட்டதற்கு ஆரம்பம் முதலே அந்த பகுதி வாக்காளர்கள் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். அண்ணா தெருவைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க நான்கு தண்டவாளங்களை கடந்து, எண்ணுார் விரைவுச் சாலை ஆகிய வற்றை கடந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள அனல்மின்நிலைய குடியிருப்பு 1இல் உள்ள  வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டியுள்ளது. இதனால் வயதானவர்கள், கர்ப்பிணிகள் வாக்காளிக்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து எர்ணாவூர், அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில், பணியில் இருந்த தேர்தல் பணியாளரிடம் வார்டு, 3, பாகம் 72இல் உள்ள அண்ணா  தெருவை, வார்டு 4 பாகம், 110இல் இணைக்கக்  கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெய ராமன், பகுதிச் செயலாளர் கதிர்வேல், ஜெய்  சங்கர் (திமுக) உள்ளிட்ட பொதுமக்கள் மனு  அளித்தனர்.

;