சென்னை, ஏப்.15- 2024 மக்களவைத் தேர்தல் பணி களுக்குச் செல்லும் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள், அலுவ லர்கள் அனைவரும் 100 சதவிகி தம் அஞ்சல் வாக்குகளை செலுத்து வதற்கு ஏதுவாக பழைய நடை முறையையே பின்பற்றிட வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பி யுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: 2024 மக்களவை பொதுத்தேர்த லையொட்டி முதற்கட்டமாக தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 அன்று தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர் தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள், அலுவலர் கள் அஞ்சல் வாக்குகள் அளிப்ப தற்கு கடந்த தேர்தல்களைப் போல அல்லாமல், இந்த தேர்தலில் முதல் முறையாக ஏப்ரல் 16 அன்று மாலை 5 மணி வரை மட்டுமே அஞ்சல் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களில் மட்டுமே பெறவும், செலுத்தவும் முடியும் என்று தலை மைத் தேர்தல் ஆணையம் தெரி வித்துள்ளது.
இதற்குப் பிறகு அஞ்சல் வாக்குகளைப் பெறவும், செலுத்தவும் வாய்ப்பு இல்லை எனத் திட்டவட்டமாக தெரிவிக் கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. ஏற்கெனவே தேர்தல் பணி களில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குகளை வழங்கு வதில் குளறுபடிகள் நடந்ததாக வும், படிவம் கிடைக்கவில்லை என்றும் ஆங்காங்கே புகார்கள் உள்ளன. இதனால் தேர்தல் பணி களில் ஈடுபடும் பெரும்பாலான அலுவலர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்நடவடிக்கை தேர்தல் பணிக்குச் செல்லும் அலு வலர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசி ரியர்கள், அலுவலர்கள் அனை வரும் ஏற்கெனவே கடந்த தேர்தல் களைப் போல வாக்கு எண் ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 4, 2024க்கு முன்னர் தங்க ளது வாக்குகளை செலுத்தும் நடை முறையை பின்பற்றி அவர்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்க ளிப்பதை உறுதி செய்வதற்கு தேர் தல் ஆணையம் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
மேலும், தேர்தல் பணி களுக்குச் செல்லும் அலுவலர்கள் பயிற்சி மையங்களில் (Facilitation Centre) அஞ்சல் வாக்குகளைப் பெறவும், செலுத்த வும் ஏப்ரல் 16 கடைசி நாள் என்ப தற்கு பதிலாக ஏப்ரல் 18 வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டு மெனவும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.