tamilnadu

img

வாச்சாத்தி மக்களின் போராட்டத்திற்கு அங்கீகாரம்!

சென்னை, ஜன. 13 - காவல்துறை, வனத்துறை, வரு வாய்த்துறை அதிகாரிகள் இழைத்த வன்கொடுமைகளுக்கு எதிரான, வாச்சாத்தி மலைவாழ் கிராம மக்கள் நடத்திய வீரம்செறிந்த போராட்டத்தை அங்கீகரிக்கும் வகையில், அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய தோழர் பெ. சண்முகத்திற்கு தமிழக அரசு ‘டாக்டர் அம்பேத்கர் விருது’ வழங்கி யிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் நடந்த வன்கொடுமை
1992-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தியில் காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 269 பழங்குடியின மக்களை கடுமையாக தாக்கியும், வீடுகள், உடமைகளை சூறை யாடியதுடன் குழந்தைகள் உட்பட பெண் களைக் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொடுமையான சித்ரவதை களை அரங்கேற்றினர்.

இந்த சம்பவத்தை  வெளியுலகிற்கே தெரியாமல் மூடியும் மறைத்தனர். ஆனால், இச்சம்பவத்தை அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் தோழர் ஏ. நல்லசிவன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு வாச்சாத்தி கிராமத்திற்கே நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை  சந்தித்து கொடுமைகளை கேட்டறிந்தது டன் இச்சம்பவத்தைக் கண்டித்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.

மூடி மறைத்த ஆட்சியாளர்கள்
அப்போதைய முதல்வர் ஜெயலலிதா,  வனத்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் நடந்த குற்றத்தை மூடி மறைக்கவே முயற்சித்தனர். அதையும் எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், வாச்சாத்தி மக்களும், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கமும் 30 ஆண்டு  காலமாக நீண்ட நெடிய சட்டப்போராட்ட த்தை நடத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்ட 269 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றுத் தந்தது.

நீண்ட, நெடிய போராட்டம்
இந்த நீண்ட, நெடிய போராட்ட பயணத்தில் தோழர் பெ. சண்முகம் தொடக்க காலம் முதல் அயராது பணி யாற்றியவர். இதனை அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தோழர் பெ.  சண்முகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி இன்று கௌரவித்துள்ளது. 

இந்நிலையில், தோழர் பெ. சண்முகத்திற்கு விருது வழங்கியதற்காக தமிழ்நாடு முதலமைச்சரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் ஆகியோர் சனிக்கிழமையன்று நேரில் சந்தித்து நன்றியினைத் தெரிவித்தனர்.

வெள்ளப் பாதிப்பை துரிதமாக எதிர்கொண்ட முதல்வர்
மேலும், இச்சந்திப்பின் போது, மிக்ஜம் புயல் மற்றும் கன மழையினால் சென்னை உள்ளிட்ட அருகமை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்  போதும், தென்மாவட்டங்களில் வரலாறு காணாத  கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்  போதும் தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்  சர், அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரி கள், அனைத்து துறை ஊழியர்களும் களத்தில்  நின்று துரிதமாக பணியாற்றி வெற்றிகரமாக மக்களின் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்ட னர். அத்தோடு ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தில்  ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளுக்கு மறு சீர மைப்பு பணிகளுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்  காத நிலையில் தமிழ்நாடு அரசு தனது சொந்த  நிதியில் மக்களுக்கு ரூ. 6,000- மற்றும் குறைந்த பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் ரூ. 1,000- நிவா ரண நிதி அளித்து மக்களுக்கு ஆதரவு கரம்  நீட்டியது. தமிழக அரசின் துரித மீட்பு நடவ டிக்கைகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரணம் அளித்ததற்கும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுக்களை யும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

மதுரை துணைமேயருக்கு  பாதுகாப்பு தர வேண்டும்
அத்துடன், மதுரை மாநகராட்சி துணை மேயர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் தி. நாக ராஜன் அவர்களை சமீபத்தில் சமூக விரோத சக்தி கள் கொலை செய்யும் நோக்கோடு பயங்கர ஆயு தங்களுடன் கொலைவெறித் தாக்குதல் நடத்த  முயன்ற போது நூலிழையில் உயிர் தப்பியுள்  ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதி கள் அனைவரின் மீதும் கடுமையான நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், சமூக விரோத சக்திகள் எப்போது வேண்டுமா னாலும் தோழர் தி. நாகராஜன் மீது மீண்டும் கொலைவெறித் தாக்குதல் தொடுக்கும் அபா யம் இருப்பதால் அவருக்கு உரிய போலீஸ் பாது காப்பு வழங்கிட வேண்டுமெனவும் முதலமைச்ச ரிடம் தலைவர்கள் வலியுறுத்தினர்.