சென்னை, டிச.9- மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இரவு- பகல் பாராது தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணி களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனொரு பகுதியாக, வடசென்னை யில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி னர்.
இங்குள்ள ஆதி திராவிடர் காலனி, வி.பி. நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக் களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, குறைகளை கேட்டறிந்தார். அமைச்சர் சிவசங்கரை தொடர்பு கொண்டு நிலைமைகளை எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். மாவட்டச் செயலா ளர் எல். சுந்தரராஜன், மாமன்ற உறுப்பினர் ஆர். ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் எஸ். பாக்கியலட்சுமி, பகுதிச்செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்டக்குழு உறுப்பி னர் கருணாநிதி ஆகியோர் உடன் இருந்த னர்.
திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஆர். ஜெயராமன், சென்னை மாநகராட்சி, தனி நபர்கள், தனியார் நிறுவனங்களின் உதவியுடன் தின மும் உணவு, பால், குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகிறார். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான பாய், பெட்ஷிட், கொசு வர்த்தி, மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட் களையும் வழங்கினார்.
ஆர்.கே. நகர் மண்டலம் 4-க்கு உட் பட்ட 41-ஆவது வார்டில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ளவர்களை கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர் எம். ராம கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து குறை களை கேட்டறிந்தனர். சிபிஎம் மாமன்ற உறுப்பினர் பா. விமலா, மாநகராட்சி, தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள் உதவி யுடன் தினசரி உணவு, பால், குடிநீர், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் ஆகிய வற்றை இந்தப் பகுதி மக்களுக்கு வழங்கி வருகிறார்.
பெரம்பூர் 37-ஆவது வட்டத்தில் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் பிஸ்கெட் பாக்கெட்டுகளை மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார், கிளைச் செயலாளர் பருவராஜ், சங்கர், ஞான மணி, சுபாஷ், சுந்தர் ஆகியோர் வழங்கி னர். மேலும் சாலைகளில் தேங்கிய குப்பை களை அகற்றினர். மாதவரம் பால் பண்ணை 26, 27ஆவது வார்டுகளுக்கு உட்பட்ட கம்பன் நகர், அலெக்ஸ் நகர், சிட்டி நெக்ஸ் ஆகிய பகுதிகளில் பகு திக்குழு உறுப்பினர் கருத்திருமன், நாதன், ஜோதி ஆகியோர் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
28-ஆவது வார்டில் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு அம்பேத்கர் இரவு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் கவுன்சிலரை தொடர்பு கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.முரு கன், டி.சாரதி, பி.மைதிலி, நிர்வாகிகள் ஜெ.மாஸ்கோ, டி.ஆறுமுகம், ஆர். வேணு, அகஸ்டின், எஸ்.உதயா, ஆர். லேவி ஆகியோர் ஈடுபட்டனர். பிஸ்கட், குடிநீர் ஆகியவற்றை வழங்கினர்.
மண்டலம் 5 ராயபுரம் 48-ஆவது வட்டத் தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகு திச்செயலாளர் எஸ். பவானி, பகுதிக்குழு உறுப்பினர் டி.வெங்கட், முனுசாமி, முரு கேசன், நீதிதேவன், கிளைச் செயலாளர் ஜாவீத், குத்தூஸ் ஆகியோர் குடிநீர், பிஸ்கட், பிரட் ஆகியவற்றை வழங்கினர்.
மண்டலம் 7 அம்பத்தூர் 85-ஆவது வட்டம் காமராஜபுரம், சலவையாளர் நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர சின் உணவு, பால் உள்ளிட்ட நிவாரண உதவிகள் கிடைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. மேலும் கட்சியின் பகு திக் குழு உறுப்பினர் கே. சீனிவாசன், சிங்க ராஜ், சிகாமணி, கேசவன், யேசுராஜ், வினோத், பாபு ஆகியோர் பிரட், பிஸ்கட் ஆகியவற்றை வழங்கினர்.
தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடசென்னை மக்களின் துயரத்தை போக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் கட்சியின் தலை வர்கள், ஊழியர்கள் தொடர்ந்து களப் பணியாற்றி வருகின்றனர். இந்த பணி களில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். லோகநாதன், பகுதிச்செயலாளர்கள் வெ.ரவிக்குமார், வி.கமலநாதன், மூத்த உறுப்பினர் ஜோதிபாசு மற்றும் பகு திக்குழு உறுப்பினர்கள், கிளைச்செயலா ளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சர் நிவாரண நிதி
சிபிஎம் எம்.பி., எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள்
ஒரு மாதச் சம்பளம்!
மிக்ஜம் புயல் பாதிப்புக்கு முதல மைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒரு மாதச் சம்பளத்தை வழங்குகின்றனர்.
இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் தனது செய் திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.