உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கே. பாலகிருஷ்ணன், ஜி. ராமகிருஷ்ணன், உ. வாசுகி ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் மற்றும் ஆர். நல்லகண்ணுவின் மகள் டாக்டர் ஆண்டாள் ஆகியோரிடம் உடல் நலம் மற்றும் சிகிச்சை குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். சிபிஐ முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணு விரைவில் மீண்டு வர வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.