தென்பெண்ணை - செய்யாறு இணைப்பு திட்டத்தை விரைவில் துவக்க சிபிஎம் பிரச்சாரத்தில் வலியுறுத்தல்
திருவண்ணாமலை,ஜூன்14- சிபிஎம் சார்பில் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், மாநில திமுக அரசு அறிவித்த திட்டங்களை நிறைவேற்றி கோரியும், ஜுன் 11 முதல் 20 வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வந்தவாசியில் வட்டார செயலாளர் அப்துல்காதர் தலைமையில் வந்தவாசி கோட்டை மூலையில் மக்கள் சந்திப்பு இயக்கம் பிரச்சாரம் தொடங்கி வந்தவாசி பழைய பேருந்து நிலையம், பஜார் வழியாக மக்களை சந்தித்து நோட்டிஸ் வழங்கப்பட்டது. இதேபோல் மாலை யிட்டான்குப்பம் பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சார இயக்கத்தில் விலைவாசி உயர்வை கண்டிக்கும் வகையில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை குறைப்பு கண்டித்தும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டும், நீட் தேர்வை கண்டித்தும், அரசியலமைப்பு சட்டம் சீர்குலைப்பு செய்வதை கண்டித்தும் மாவட்ட செயலாளர் ப.செல்வன் உரையாற்றினார். மாவட்டக் கழு உறுப்பினர்கள் யாசர் அராபத், சுகுணா, வட்டக்குழு உறுப்பினர்கள் சுகுமார், சிவக்குமார், அண்ணாமலை, மோகன், ஆனந்தன், நகரச்செயலாளர் ராதா கிருஷ்ணன், கிளை செய லாளர்கள் ராஜேந்திரன், சபானா ஹஸ்மி, தேவராஜ், தீபாநாதன் மற்றும் கரும்பு சங்க மாநில நிர்வாகி பெ.அரிதாசு உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். செய்யாறு பிரச்சாரம் இதேபோல் திரு வண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டாரக்குழு சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இடைக்குழு நிர்வாகி தேவராஜன் தலைமை தாங்கினார். கீழ் நேத்தப்பாக்கம், ஆக்கூர், மகாஜனம்பாக்கம், மாங்கால் கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மாவட்டக் குழு உறுப்பினர் டி. வெங்கடேசன், இடைக் குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செங்கம் பிரச்சாரம் திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் நடைபெற்ற கிளர்ச்சி பிரச்சாரத்தில் வட்டார செயலாளர் ஏ. லட்சுமணன், வட்ட குழு நிர்வாகிகள் பி. கணபதி, நகர செயலாளர் சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.எம்.பிரகாஷ், ஆர். ரவி, குபேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தென்பெண்ணை - செய்யாறு இணைப்பு திட்டத்தை விரைவில் துவங்க வேண்டும், அரசு புறம்போக்கு நிலங்க ளில் குடியிருக்கும் மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும், செங்கம் நகரில் போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர். பெரணமல்லூர் பெரணமல்லூர் ஒன்றி யம் அரியபாடி கிராமத்தில் சிபிஎம் இடைக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தாடி நொளம்பை, வல்லம், ஆனைபோகி, கிருஷ்ணா புரம் கூட்டுச்சாலை, பெரணமல்லூர் பேருந்து நிலையம், ஆவணியாபுரம் கூட்டுச்சாலை ஆகிய இடங்களில் துண்டறிக்கை களை விநியோகம் செய்து செய்தனர். இதில் கட்சியின் ஒன்றிய செயலாளர் பிரபா கரன், இடைக் குழு உறுப்பி னர்கள் பி.கே.முருகன்,ஜி.அறிவழகன், இரா.ராஜ சேகரன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க ஒன்றிய தலைவர் கே.பெருமாள், ஜனநாயக வாலிபர் சங்கம் ராமதாஸ், மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஒன்றிய பொருளாளர் பாண்டுரங்கன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். சனிக்கிழமையன்று திருவண்ணாமலை பெரி யார் சிலை அருகே நடை பெற்ற கிளர்ச்சி பிரச்சார இயக்கத்திற்கு கட்சியின் மாநகர குழு உறுப்பினர் கே. பழனி தலைமை தாங்கி னார், மாநகர செயலாளர் எம். பிரகலாதன், மாநகர குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மலையடிவாரப் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், திருவண்ணாமலை - சென்னைக்கு கூடுதலாக ரயில் போக்குவரத்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் உரையாற்றினர்.