குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று (ஜூலை 15), ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.செல்வராஜ், வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் த.கன்னியப்பன், என்.கங்காதரன், ஏ.பத்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.